நாகர்களின் இரகசியம்

தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →

வாயுபுத்ரர் வாக்கு

பிரகஸ்பதி.. தன் நண்பன் உயிரோடு கிடைத்த சந்தோஷத்தை விட, ஐந்து வருடங்களாக மறைந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சிவனைத் துளைத்தெடுக்கிறது. மேலும் பஞ்சவடியில் தங்களைக் கொல்வதற்கு எதிரிகளான சக்ரவர்த்தி தக்ஷரும், அயோத்தி அரசர் திலீபரும் கைகோர்த்திருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சதி திட்டத்திற்குப் பின்னால் அவர்கள் இருவரையும் ஆட்டிவைக்கும் ஒரு சூத்திரதாரி இருப்பதை சிவன் உணர்ந்தார். ஒரு யுகத்தின் மிகப்பெரிய நன்மையே(சோமரசம்) தீமையாக மாறும் என்பதை அறிந்த சிவனுக்கு... Continue Reading →

மெலூஹாவின் அமரர்கள்

மெலூஹா! உன்னத வாழ்வை உணர்ந்த தேசம்.. மெலூஹாவில் வாழும் மக்கள் சூர்யவம்சிகள். சூரியனின் வழிவந்த அரசர்களின் மக்கள். நேர்மையானவர்கள். அரசின் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் மதித்து வாழ்பவர்கள். தீமையின் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற முக்கியமான ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மெலூஹர்களிடம் வந்து சேர்கிறார், சிவன். சோமரஸத்தின் உதவியால் நீலமாக மாறிய சிவனின் கழுத்து. நீலகண்டர்.. தீமையை அழித்துத் தங்களை உய்விக்க வந்த கடவுளாகவே சிவனைக் கருதும் சூர்யவம்சிகள் சிவனிடம் உதவியை எதிர்பார்க்கின்றனர். கடவுளாகவே இருந்தாலும் காதல் வயப்படுவது இயல்பே.... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑